Friday, December 30, 2011

ஓர் ஆட்டு மந்தையின் சந்தை மதிப்பு எவ்வளவு ?

உதய சூரியனைத்

தலை உயர்த்தாமல் பார்த்தேன்

மலையுச்சியில் நின்று

பாடல் பரவும் முன்

காற்றில் இருந்தது

கனமான வெற்றிடம்

வெள்ளமாகிறது புயல் மழை

தானாய்ப் பெய்யும் மழையே

தண்ணீர் தரும்

புத்தகம் போடாத எழுத்தாளன்

புத்தகக் கண்காட்சிக்கு வந்தால்

துக்கம் விசாரிக்கிறார்கள்

சாலையோரக் கொய்யாக்காரன்

ஒரு பழத்தைக் அரிந்துண்கிறான்

என்னே அழகிய காட்சி !

ஏறி ஏறி இறங்குகிறது

இறங்கி இறங்கி ஏறுகிறது

பங்குவிலை


வெற்றிலைக்குப் பெண்ணுறுப்பின் வாசமாம்

அப்போ, ஆணுறுப்புக்குப்

புகையிலை வாசமா ?

போலீஸ் ஸ்டேஷன் ரைட்டரைவிட

எவ்விதத்தில் உயர்ந்தவர்

சினிமா ரைட்டர் ?

இந்தக் காலத்திலும்

ஊடகங்களில் ஜோதிடம் பேசுகிறானே,

கேட்கும் நாம் அவ்வளவு கேனமா !

தண்ணீர் தர

மறுக்கும் உலகில்

நாம் வாழ்கிறோம்

நாய்க்கடிக்கு ஊசிபோட

அரசு மருத்துவமனை சென்றால்

அங்கே வரிசையில் நூறுபேர் !

குற்ற உணர்ச்சி வதைக்கிறது

மூவர் மட்டுமே அமர்ந்திருக்க

ஒரு மதியக் காட்சி கண்டேன்

ஐம்பது உருப்படிகள் உள்ள

ஓர் ஆட்டு மந்தையின் சந்தை மதிப்பு

இரண்டரை லட்சமாம்

2012-ல் உலகம் அழியப்போகிறது

புத்தாண்டு வாழ்த்து

சொல்வதா வேண்டாமா ?

1 comment:

  1. நொறுக்குத் தீனியல்ல
    காஃபிக்கு சீனி
    நறுக் கவிதைகள்

    ReplyDelete