Saturday, April 30, 2011

செல்பேசிக்குள் சிறைப்பட்டிருந்த சித்திரங்கள்


ஓய்ந்த நேரத்தில் என் செல்பேசியின் ஒளிப்படங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அவற்றில் சிலவற்றைக் குறிப்புகளோடு பகிர்ந்துகொள்கிறேன். பழைய குமுதத்தைப் புரட்டுவதும் சமயத்தில் இன்பம்தானே !


அருவி
ஆயிரம் சொற்களால் விவரித்தாலும்
அருவி

கட்டுமானப் பணி
விதானப் பூச்சு நடந்துகொண்டிருக்கிறது
சிமெண்டு செய்யும் மாயம்
தொழிலாளிக்கும் வியப்பு !
துளிரும் இலை
அதை உண்ணும்
புழுவின் துளை
அடியில் மலையடுக்கு
இடையில் முகிலடுக்கு
முடியில் வெளியடுக்கு

நீலவானில்
நீந்திச் செல்லும் விமானம் !
காணமுடிகிறதா ?

பாலக்காடு அருகில்
கொடுவாயூர் சிவன் கோவில் குளம் !
உதவியாளரின் தமக்கை திருமணத்திற்குச் சென்றால்
மண்டபத்து எதிரே
மணிப்பவழ நீர்த்தடாகம் !
இறங்கி நீராடினேன்
நீரை
நீந்திக் குடைந்து குளித்தேன் !
குளத்தில் உள்ள முன் தலை
என் தலை !


சாலை வளையுமிடத்தில்
ஒரு சத்திர நிழல்
தூரத்தில் முகில்
மழைக்குத் திரண்ட திரள்


நான் அமர்ந்திருக்கிறேன்
என் கால்மீது அமர்ந்திருக்கிறது
சேவற்குஞ்சு


நான் உறங்குகிறேன்
என்மீது
பூனை உறங்குகிறது


1 comment: