Saturday, September 11, 2010

கானல் தோற்றங்கள்

இன்னும்

கடவுளை நம்பும் உங்களை நினைத்தால்

பரிதாபமாக இருக்கிறது


இன்னும்

விடியலை நம்பும் உங்களை நினைத்தால்

வெட்கமாக இருக்கிறது


இன்னும்

கண்ணீர் மல்கப் பிரார்த்திக்கும் உங்களை நினைத்தால்

பதற்றமாக இருக்கிறது


இன்னும்

எதிர்காலத்தில் பற்று வைத்திருக்கும் உங்களை நினைத்தால்

பாவமாக இருக்கிறது


இன்னும்

காதலிக்கும் உங்களை நினைத்தால்

சிரிப்பாக இருக்கிறது


இன்னும்

திருமணம் நிச்சயிக்கும் உங்களை நினைத்தால்

விநோதமாக இருக்கிறது


இன்னும்

பிள்ளை பெற்றுப் பெயர் வைக்கும் உங்களை நினைத்தால்

குழப்பமாக இருக்கிறது


இன்னும்

எப்படியாவது வாழத் துடிக்கும் உங்களை நினைத்தால்

பயமாக இருக்கிறது


4 comments:

  1. "இன்னும்

    எப்படியாவது வாழத் துடிக்கும் உங்களை நினைத்தால்

    பயமாக இருக்கிறது"


    இன்னும்

    எப்படியாவது வாழத் துடிக்கும் உங்களை நினைத்தால்

    வருத்தமாக இருக்கிறது

    என்று மாற்றுங்கள் கடவுளை நினைத்தவர்களை
    விநோதமாக பார்க்கும் நீங்கள் சாதாரர்களை பார்த்து
    பயம் கொள்ளக் கூடாது! நண்பா !

    ReplyDelete
  2. நண்பரே, ஆலோசனைக்கு நன்றி !

    கீழ்க்காணும் ஒழுங்குவரிசையை நோக்கவும்.

    பரிதாபம்-வெட்கம்-பதற்றம்-பாவம்-ஏளனம்-விநோதம்-குழப்பம்-பயம் !

    சரியாக இருக்கிறதா ?

    ReplyDelete
  3. அண்ணே, இவை அனைத்தும் இருந்தும், எதுவும் மாறப் போவதில்லையே...

    ReplyDelete
  4. இன்னும் இன்னும்
    சொல்லிக்கொண்டே இருக்கபோகிறோம்
    கவிஞரே இப்படியாக

    ReplyDelete