Sunday, June 5, 2011

மழை நீரோடும் நொய்யல்

சில நாள்களாக கோவை மலைமுடிப் பகுதிகளில் கேரளத் தென்மேற்குப் பருவமழையின் சாரல்மழை தூவியது. அதனால் நொய்யல் நதியில் சிறுநீர்ப்பெருக்கு வழிந்தது. அதில் இறங்கிக் கால்நனைக்கும் வாய்ப்பு இன்றெனக்கு ஏற்பட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை என்ற தொடர்தான் எத்துணை உண்மை ! நன்னீர் பெருக்கும் நதிக்கு என்றும் உண்டோ நிரந்தரப் புனிதம் !



பாதங்களைத் தழுவும்
பவித்ரம் !
பருகுவதற்கு இனிவரும்
பறவைக்கூட்டம் !



ஊரெல்லாம் உறங்கியது
உற்பத்தித் தொழிற்சாலை !

உற்பத்தியைத் தொடங்கியது
கூழாங்கல் தொழிற்சாலை !


நீர்த்தாவரத்தின் வேர்களே !
உமது நிழலில்
உறங்கட்டும்
ஒருகோடி மீன்கள் !

பச்சை நீர்ப்புரள்வில்
மரகதங்களே
உங்களை உரமேற்றிக்கொள்க !

நதிக்கு எடுப்பிக்கலாம் கரை
நீருக்கு எடுப்பிக்கலாம் அணை
ஆனால், என் மக்களே !
காலம்
யாராலும் கட்டமுடியாத கருங்குதிரை !



4 comments:

  1. கூழாங்கல் தொழிற்சாலை மிக ரசித்தேன்....

    ReplyDelete
  2. காலச் சக்கரத்தின் சுற்றலில் மீண்டும் ஒரு முறை நதியில் நீரோட்டம்...
    படங்களில் தெரியும் உற்சாகம் கவிதையிலும் தோன்றுகிறது...

    ReplyDelete
  3. சிறுநீர்ப்பெருக்கு//

    ஊரெல்லாம் உறங்கியது
    உற்பத்தித் தொழிற்சாலை !
    உற்பத்தியைத் தொடங்கியது
    கூழாங்கல் தொழிற்சாலை !//

    பச்சை நீர்ப்புரள்வில்
    மரகதங்களே
    உங்களை உரமேற்றிக்கொள்க !//

    ர‌ச‌னையான‌வை.

    ReplyDelete