Saturday, October 9, 2010

அன்று


அன்று

  •  

மதுக்கோப்பையைப் போல்

மாறி நின்றது

முருங்கைப் பூ

 

அது

காம்பிலேயே கைவிடப்பட்ட

பறித்துச் சூடப்படாத

மாற்று மல்லிகை

 

தேன்சிட்டுக்கு உண்டே

சின்னஞ்சிறு அலகுக் குழல் !

அரிசி மணி அளவேயான அதன் வயிற்றுக்கும்

பசியென்ற

பழைய நியதி உண்டே !

 

மலர்க் கோப்பைக்குள்

மூக்கால் மூழ்கி

மதுத்துளியைப் பருகியது

 

மலர் கருவுற்று

பிஞ்சொன்றை ஈன்றது

 

பிஞ்சுக்கும் சிட்டுக்கும்

இருக்கவில்லை

பிறகெந்த உறவும் ! 

7 comments:

  1. முன்னுறவே தீராத போது
    பிறகேன்
    பிற உறவு?

    ReplyDelete
  2. கவிதையில் உள்ளதோர் ஒருங்கு (integrity) இன்னதென்று தெளிந்து பாராட்டுகிறேன்.

    தாதுச்சேர்க்கை மலர்களுக்கு இடையில் நிகழும் ஒன்று. தேன்சிட்டு ஒரு கருவி அவ்வளவே. ஆனால் இடைத் தரகின் ஒரு தேவையை,

    //அது

    காம்பிலேயே கைவிடப்பட்ட

    பறித்துச் சூடப்படாத

    மாற்று மல்லிகை//

    என்னும் அடிகள் நெறிப்படுத்துவதாக எண்ணுகிறேன்.

    //பிஞ்சுக்கும் சிட்டுக்கும்

    இருக்கவில்லை

    பிறகெந்த உறவும்!//

    என்பது அப்படித்தான் நேராகிறது.

    மறுத்து, இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று நிலையாமை அச்சத்தால் வனைந்துகொண்டவை மனித உறவுகள்.

    ReplyDelete
  3. வேலு.ஜி, எஸ்.கே, கொல்லான் நன்றி !

    அண்ணாச்சிக்குள் உறங்கும் கவிதை விமர்சகர் ஒட்டுமொத்தத்தையும் ஊடுருவிப் பார்க்கும் அழகே அழகு !

    ReplyDelete
  4. அவரவருக்கான வேலை(கடமை) முடித்தல் என்பது இது தானா கவிஞரே
    நல்ல இருக்கு

    ReplyDelete
  5. புரிந்துகொள்ள முடிகிறது
    சொல்லத் தெரியவில்லை.

    த. ஜெய்குமார்

    ReplyDelete