Monday, July 26, 2010

தீவினை அச்சம்



தீவினை அச்சம்



தீங்கிழைப்போன் காடழிப்பான் நாடழிப்பான்

தீங்கிழைக்க அஞ்சுவோன்

மலர்கிள்ள மயங்குவான்


தீங்கெனும் கன்றுகளுக்கு நீருற்றினால்

வளர்ந்து மரமாகி

தீங்கெனும் எரிநிழல் பெய்யும்


எதிர்த்தடிக்க எண்ணாதிருந்து

கடந்துவிடும் அறிவு

தீமையின் நஞ்சுக்கு முறிமருந்து


அறியாமற் செய்த தீங்குக்கு

ஆற்றிநின்ற

அறங்களே பகை


இல்லாமையால் செய்த தீங்கு

பசிக்கு

முள்ளோடு தின்ற கள்ளிப் பழம்


கெடுதல்களால் கெடாதிருக்க

கெடுதல்களைக் கொடாதிரு !

சுடுகொள்ளி அகன்றால் சூடேது ?


எதிரியால் தீங்கு எள்ளளவு !

எதிர்மறைச் செயலால்

ஏற்பட்ட தீங்குக்கேது கொள்ளளவு ?


தீச்செயல் விளைவை

ஓடியொளிந்து காப்பதேது ?

வால்பற்றிய நெருப்பை வைக்கோல் போரில்

தேய்த்தணைக்க முயன்றதாம் குரங்கு !


தீங்கிழைக்கத் தெரியாதிருத்தல்

அடுத்துக் கெடுக்க அறியாதிருத்தல்

உன்னை ஓம்பும் உளப்பாங்கு


தீச்செயல் அறியான் நெஞ்சு

வண்ணத்துப் பூச்சி

வந்தமரும் பூங்கொடி


6 comments:

  1. //மலர்கிள்ள மயங்குவான்//

    மிகவும் ரசித்தேன். கவிதை அருமை.

    ReplyDelete
  2. நவீன வள்ளுவரே,

    உமது கருத்து அருமை.
    தொடர்ந்து செல்க.

    ReplyDelete
  3. //கெடுதல்களால் கெடாதிருக்க

    கெடுதல்களைக் கொடாதிரு

    சுடுகொள்ளி அகன்றால் சூடேது//

    தமிழின் அழகு,உங்கள் வரிகளில்..அருமை அண்ணா

    ReplyDelete
  4. கவிஞரே, ஒவ்வொரு கவியிலும் அருவியான அழகான தமிழ் மயக்கவைக்கிறது. அருமை

    ReplyDelete
  5. பசிக்கு
    முள்ளோடு
    தின்ற
    கள்ளிப்பழம்.

    அற்புதம்.

    ReplyDelete
  6. நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி !

    ReplyDelete